Skip to content

தூய்மை பணியாளரை கொடியேற்ற வைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்..

நாட்டின் 76வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி 10வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். டெல்லியில் ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்திய நிலையில் , செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதேபோல் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட அவர் தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

Vijay Makkal iyakkam

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் தூய்மை பணியாளரை வைத்து தேசிய கொடி ஏற்ற வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கோவை சுந்தராபுரம் பகுதியில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தினர்  தூய்மைப் பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.  பின்னர் தூய்மைப் பணியாளர்களை கொடியேற்ற வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!