Skip to content

விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

  • by Authour

நடிகர் விஜய் கட்சியின் தவெக முதல் மாநாடு  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி  நடைபெற்றது.  மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் ,விவசாயிகள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த  சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில்  இன்று விஜய் விருந்து அளித்தார்.

அவர்கள் அனைவரும் இதற்காக பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். விஜய் சந்திப்பின் போது செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினர். இதனால் செல்போன்களை பேருந்திலேயே வைத்துவிட்டு வர தவெக தலைமையால் அறிவுறுத்தப்பட்டது.  பின்னர் பனையூரில் தவெக அலுவலகத்தில் சாதம், வடை , பாயாசம் பொரியல் , சாம்பார் , வத்தக்குழம்பு , ரசம் , மோர், அப்பளம் என சைவ உணவு பரிமாறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!