நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இதைதொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் நவநாள் தினம் தோறும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி 7வது நாளான இன்று தஞ்சை மறை மாவட்டத்தை சேர்ந்த அருட்திரு டார்சிஸ்ராஜ் புனிதம் செய்து கொடியேற்றி வைத்தார்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய
நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி7ம் தேதி நடைபெறுகிறது அன்னையின் பிறந்த நாள் விழா வரும் 8ம் தேதி நடைபெறுகிறது அதனை தொடர்ந்து அன்று மாலை கொடி இறக்கம் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.