புதுக்கோட்டை திருமயம் அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார், இரண்டு டாடா ஏஸி வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் உடல் நசுங்கியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசாரி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
புதுக்கோட்டையில் வாகனங்கள் மோதி- 3 பேர் பலி…. பரபரப்பு..
- by Authour
