Skip to content

வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

  • by Authour

கரூர் உழவர் சந்தை அருகே உள்ள பிரம்ம தீர்த்தம் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத வரலட்சுமி நோன்பியை முன்னிட்டு இன்று இரவு வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள்

சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்டு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து வாராகி அம்மனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அனுவித்த பிறகு சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து வாராகி அம்மனுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத வரலட்சுமி நோன்பு சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!