மதுரை பாண்டி கோவில் அருகே கும்பகோணம் சென்று விட்டு 24 பயணிகளுடன் மதுரை திரும்பிக் கொண்டிருந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
