Skip to content

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் விழுந்த மரம்….. 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு…

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீதோசன நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி, ஆழியார் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து இன்று காலை 11 மணி அளவில் ஆழியார் காவல் நிலையம் அருகே மரம் ஒன்று சாலையில் விழுந்தது.
இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இது குறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த் துறையி அதிகாரிகள் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் மரத்தை அப்புறப்படுத்த வந்த ஜேசிபி இயந்திரம். மற்றும் மரம் அறுக்கும் இயந்திரம் திடீரென பழுதானதால் மரத்தை அப்புறப்படுத்த முடியாமலும் போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் நெடுஞ்சாலைத்துறை திணறினர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தற்பொழுது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!