Skip to content

இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வருவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

  • by Authour

அமெரிக்​க அதிபராக  கடந்த மாதம் 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப்  பதவி​யேற்​றார். அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐ.நா அமைப்பு​களில் இருந்து வெளி​யேறு​வது, உலக சுகாதார நிறு​வனத்​தில் இருந்து வெளி​யேறு​வது, வங்கதேசம், பாகிஸ்தானுக்கு வழங்​கும் நிதி​யுதவியை நிறுத்து​வது,  என பல்வேறு உத்தர​வுகளை பிறப்​பித்​துள்ளார்.

குறிப்பாக அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார். அதன்​படி, பிரேசில், மெக்​சிகோ, இந்தியா உட்பட பல்வேறு நாடு​களின் குடிமக்கள் அவரவர் நாட்டுக்கு அனுப்​பப்​பட்டு வருகின்​றனர்.

அதன்​படி, சி-17 என்ற ராணுவ விமானத்​தில்  104 இந்தி​யர்கள் அமெரிக்​கா​வில் இருந்து திருப்பி அனுப்​பப்​பட்​டனர். அவர்கள் வந்த ராணுவ விமானம் நேற்று பிற்​பகல் 1.55 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்​தசரஸ் குருராம் தாஸ் சர்வதேச விமான நிலை​யத்தை வந்தடைந்​தது.

அமெரிக்க ராணுவ விமானத்​தில் நாடு திரும்பிய 104 பேரில் 30 பேர் பஞ்சாபை சேர்ந்​தவர்​கள். ஹரியானா, குஜராத்தை சேர்ந்த தலா 33 பேர், மகாராஷ்டிரா, உ.பி.யை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரை சேர்ந்த 2 பேர் அடங்​கு​வர்.
முன்னதாக அமெரிக்​கா​வில் இருந்து 205 இந்தி​யர்கள் நாடு கடத்​தப்​பட்​டதாக தகவல் வெளி​யானது. எனினும், இந்தி​யர்கள் எத்தனை பேர் இதுவரை திருப்பி அனுப்​பப்​பட்​டனர் என்று அதிகாரப்​பூர்​வமாக தகவல் வெளி​யிட​வில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்​களுக்கு முன்னர் பிரதமர் மோடி பேசினார். பின்னர் ட்ரம்ப் கூறுகை​யில், ‘‘சட்​ட​விரோத குடியேற்றம் குறித்து பிரதமர் மோடி​யிடம் பேசினேன். அந்த விஷயத்​தில் எது சரியோ அதை இந்தியா செய்​யும் என்று தெரி​வித்​தார்’’ என்று கூறினார். இதையடுத்து இந்தி​யர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. இதற்​கிடை​யில், வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்​கிறார். அப்போது அதிபர் ட்ரம்பை சந்தித்து இருநாட்டு உறவை மேம்​படுத்த பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு​வார்த்தை நடத்த உள்ளார்.

அமெரிக்​கா​வில் 18 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இந்தி​யர்கள் சட்ட​விரோதமாக தங்கி​யிருப்​பதாக புளூர்​பெர்க் கடந்த ​மாதம் புள்ளி ​விவரம் வெளியிட்டது.  அமெரிக்காவில் இருந்து  திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டது  இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து  இன்று மக்களவையில் எதிர்க்கட்சி கள்  பிரச்சினையை எழுப்பினர். அத்துடன்  இந்தியவர்களை  பயணிகள் விமானத்தில் அனுப்பாமல்,  ராணுவ விமானத்தில் அழைத்து வந்ததும்  இந்தியர்களுக்கு அழைக்கப்பட்ட அவமரியாதை. இதை ஏன் பிரதமர் கண்டிக்கவில்லை என்றும்   காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  விளக்கம் அளிக்க உள்ளார்.

 

error: Content is protected !!