Skip to content
Home » ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

அதன்படி நடப்பாண்டு 1,056 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல்நிலைத் தேர்வெழுத 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் 79 நகரங்களில் கடந்த ஜூன் 16-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 6 லட்சம் பேர் வரை எழுதியதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் சென்னை உட்பட 5 நகரங்களில் நடத்தப்பட்ட தேர்வை 25 ஆயிரம் பேர் வரை எழுதினர்.

இந்நிலையில் முதல்நிலை தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது. முதல்நிலை தேர்வில் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 650 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தமிழகத்தில் சுமார் 700 பேர் வரை தேர்ச்சி பெற்றனர்.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு செப். 20-ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் 16 நாட்களில் வெளியிடப்பட்டது. இந்தாண்டு 14 நாட்களிலேயே முடிவுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!