Skip to content

பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணுவுக்கு வரவேற்பு

  • by Authour

தமிழ் சித்தர்கள் வகுத்து வைத்த அற்புதமான யோகக் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஆன்மீக பணியில் பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணு ஈடுபட்டிருக்கின்றார். பல ஆன்மீக தகவல்களை உலகம் முழுவதும் உள்ள 90 நாடுகளுக்கு இணையத்தின் வாயிலாக, உலகியல் வாழ்க்கையை உயர்ந்த கட்டத்தில் வாழ்வது குறித்தும், உயர்ந்த கட்ட நிலைகளை அடைவது குறித்தும் போதித்து வருகின்றார். இந்த பவுண்டேசன் 2 ஆண்டுகளுக்கு முன் அவிநாசி பகுதியில்   தொடங்கப்பட்டது. வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து வந்த  குருஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஞ்சி விஷ்ணு சுவாமிகள் மற்றும் வள்ளலார் போதிக்கின்ற கருத்துகளை உலகம் முழுவதும் இட்டு செல்லும் விதத்திலே இந்த பணியை குருஜி மகாவிஷ்ணு முன்னெடுக்கின்றார். இந்த நிலையிலே, தமிழ்நாட்டை கடந்து உலகம் முழுவதும் இந்த வாழ்வியல் தத்துவங்களை கொண்டு செல்லும் விதமாக, பரம்பொருள் ஃபவுண்டேசன் கிளைகளை மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய்,

கம்போடியா போன்ற நாடுகளில் தனது கிளையை விரிவுபடுத்தியிருக்கின்றது. அடுத்ததாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரம்பொருள் ஃபவுண்டேசன் கிளைகளை விரைவிலே ஆரம்பிக்கின்றனர். உலகம் முழுவதும் பரம்பொருள் ஃபவுண்டேசன் ஆன்மீக பணிகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதாக குருஜி தெரிவித்திருக்கின்றார். ஞானபுரிதலுடன் வாழ கருணை அன்பை பகிர வேண்டும். அப்போது இந்த சமுதாயம் ஞான சமூதாயமாக மாறிவிடும். கருணை மட்டுமே ஒரே தீர்வென குருஜி மகாவிஷ்ணு தெரிவித்திருக்கின்றார். இந்த அறக்கட்டளையானது ஆன்மீக பணிகள் மட்டுமின்றி, கல்வி செலவு, அன்னதானம் செய்தல் பணிகளிலும் ஈடுபட்டிருக்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!