Skip to content
Home » டூவீலர் திருடும் இளைஞர்கள்… அதிர்ச்சி சிசிடிவி… 2 பேர் கைது..

டூவீலர் திருடும் இளைஞர்கள்… அதிர்ச்சி சிசிடிவி… 2 பேர் கைது..

கோவை, சாய்பாபா காலனியில் பாரதி பார்க் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டுக்கு முன் நிறுத்தி இருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக பகுதி பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தால் இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அப்பகுதியில் பொருந்தி இருந்த சி.சி.டி.வி காட்சிகளை பார்த்த போது அதில் இருவர் இருசக்கர

வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது குறித்து சாய்பாபா காலனி காவல் துறையில் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர். சி.சி.டி.வி காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தினர். அப்பொழுது கரும்பு கடை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஆஷிக் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் அவருடன் வந்த மற்றொரு நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!