Skip to content
Home » பைக்குடன் வாய்க்காலில் விழுந்தவர் பலி

பைக்குடன் வாய்க்காலில் விழுந்தவர் பலி

தஞ்சாவூர் அடுத்த கரந்தை வேலூரைச் சேர்ந்த உத்திராபதி மகன் ராஜராஜன் (43). இவர்  நேற்று மாலை சாலியமங்கலம் அருகே பள்ளியூரில் ஒரு துக்கத்திற்கு சென்று விட்டு பைக் கில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

இடையிருப்பு அருகில் மெயின் சாலையில் வந்துக் கொண்டிருந்த போது சாலையோரம் உள்ள  வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்தார். இது குறித்து இடையிருப்பு கிராம நிர்வாக அலுவலர் மகாபிரபு கொடுத்த தகவலின் பேரில் மெலட்டூர் போலீசார் சென்று ராஜராஜனை மீட்டு அய்யம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்,  அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து  மெலட்டூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!