Skip to content
Home » டூவீலர்கள் மோதி விபத்து…. கணவன் -மனைவி காயம்…. திருச்சியில் சம்பவம்…

டூவீலர்கள் மோதி விபத்து…. கணவன் -மனைவி காயம்…. திருச்சியில் சம்பவம்…

பெரம்பலூர் மாவட்டம், பொம்மனபடி பகுதியைச் சேர்ந்தவர் அழகுத்துறை . இவர் தனது மனைவி  மரகதத்தை அழைத்துக் கொண்டு டூவீலரில் திருச்சி துறையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கிழக்குவாடி பெட்ரோல் பங்க் அருகே அழகுதுரை வந்து கொண்டிருந்தபோது அவருக்கு எதிரே டூவீலரில் வந்த வடக்குப்பட்டியைச் சேர்ந்த கோகுல் என்பவர் அழகுதுரையின் டூவீலர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் கீழே விழுந்த கணவன் மனைவி பேரும் காயம் அடைந்து துறையூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து டூவீலரில் அதிவேகமாக வந்து  மோதி விபத்தை ஏற்படுத்திய கோகுல் மீது வழக்குப்பதிவு செய்து துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!