Skip to content
Home » தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி நிர்வாகி உள்பட 2 பேர் விபத்தில் பலி..

தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி நிர்வாகி உள்பட 2 பேர் விபத்தில் பலி..

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநில முதல் மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் சென்று கொண்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் தலைமையில் 5 பேர் ஒரு இனோவா காரில் மாநாட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேக் உசேன் பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தது காரின் முன்பக்க டயர் திடீரென்று சாலை நடுவே இருந்த சென்டர் மிடியனில் மோதியது இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழத்ந கார சாலையில் தாறுமாறாக ஓடிய கார் சாலையின் இடது புறத்தில் இருந்த மரத்தடியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுனர் உட்பட ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் காயமடைந்தவர்களை பின்னால் வந்த தமிழக வெற்றி கழகத்தினர் வாகனங்களை நிறுத்தி அதில் ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கலை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது பின்னர் மாவட்ட இளைஞரணி தலைவர் வக்கீல் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் மற்ற மூன்று பேருக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விபத்து பற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்ற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!