Skip to content
Home » குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

  • by Senthil

திருச்சி, சிறுகனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(21). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் யூஜின்மில்டன் ஆகிய 2 பேருக்குமிடையே பொங்கல் விளையாட்டு போட்டியின் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுரேஷ் தனியாக நின்று கொண்டிருந்தபோது, மது போதையில் வந்த பிரவீன் மற்றும் யூஜின்மில்டன் ஆகிய 2 பேரும் சேர்ந்து கத்தியால் சுரேஷை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சுரேஷ் மண்ணச்சநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுகனூர் போலீசார் பிரவீன் மற்றும் யூஜின் மில்டன ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!