திருச்சி, ஶ்ரீரங்கம் கோட்டம் திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை 24ம் தேதி காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான திருவானைக்காவல் சன்னதி தெரு, வடக்கு உள் வீதி, தெற்கு உள் வீதி, ஒத்த தெரு, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கர் நகர், பஞ்சகரை ரோடு, அருள் முருகன் கார்டன், ஏயூடி நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு , கும்பகோணம் சாலை , சிவராம் நகர், எம். கே. பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழ கொண்டயம் பேட்டை, நடு கொண்டையம் பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர் சீலி , கிளிக்கூடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற் பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
