Skip to content
Home » திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

திருச்சி, இனாம்குளத்தூர் , ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது   பாம்பு ஒன்று வந்து ஆரோக்கியராஜை கடித்துள்ளது. இதனைகண்டு அவர் சத்தமிட்டுள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் இனாம்குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து  மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆரோக்கியராஜை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆரோக்கியராஜின் மனைவி ஜெயாமேரி அளித்த புகாரின் பேரில் இனாம்குளத்தூர் போலீசார் வ ழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு்ளளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!