Skip to content
Home » திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க விரைவில் நடவடிக்கை…

திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க விரைவில் நடவடிக்கை…

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் பாஜகவினர் மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் துப்பாக்கி தொழிற்சாலையில் 20 ஆண்டுகளாக தூய்மை பணியாளர்களாக ஒப்பந்தம் அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலமாக பணிபுரிந்து வருகிறார்கள் இந்த நிலையில் தற்போது அங்கு உள்ள தனியார்

திருச்சியில் மீண்டும் மூடப்பட்ட சிவாஜி சிலை- Dinamani

நிறுவனம் ஏற்கனவே பணியில் இருந்த நபர்களுக்கு பணியை வழங்க மறுத்து புதிய நபர்களுக்கு பணிகளை வழங்குவதாகவும் இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி எவ்வித நடவடிக்கை அந்த தனியார் நிறுவனம் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்…

மேலும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே முத்தரையர் மணி மண்டபம், பன்னீர்செல்வம் மணிமண்டபம், தியாகராஜ பாகவதர் மணி மண்டபம் பணிகள் முடிக்கப்பட்டு ஓர் ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமலேயே உள்ளது அதனை விரைந்து திறக்கவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் தெரிவித்தனர். அதேபோல் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி சிலையை சட்டரீதியாக எதிர்கொண்டு விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!