Skip to content

போலி ஆவணம் தயாரித்து 1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி… திருச்சியில் அதிர்ச்சி…

  • by Authour

திருச்சி தில்லைநகர் 6 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம் .இவரது மகள் தனலட்சுமி (60). இவரது சகோதரர் லட்சுமண மோகன் என்பவருக்கு சொந்தமான காலி இடம் திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பாத்திமா நகர் பகுதியில் உள்ளது. இந்த இடம் 2400 சதுர அடி ஆகும். இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆள் மாறாட்டம் செய்து இந்த இடத்தின் பத்திரத்தை காணவில்லை என போலியான பெயரில் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்து சி.எஸ்.ஆர் பெற்று, அதன் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து இந்த இடத்தை 4 பேர் கொண்ட கும்பல் மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்.  தனலட்சுமி திருச்சி மாநகர குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவல்லி4 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!