Skip to content
Home » 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. திருச்சி வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை..

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. திருச்சி வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை..

கடந்த 16.03.2020-ந்தேதி திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழதேவதானத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கோட்டை அனைத்து மகளிர் போலீசுக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கடந்த 16.03.2020-அன்று புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி  கீழதேவதானத்தை சேர்ந்த செல்வமணி என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடந்த 23.07.2020-ந்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் திருச்சி மகிளா கோர்ட் நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று தீர்பபு அளித்தார்.. அதில் எதிரி செல்வமணிக்கு 20 மற்றும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.7,000/- அபராதம் விதித்து இந்த இரண்டு தண்டனைகாலத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும்  தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் அருள்செல்வி ஆஜரார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!