Skip to content

திருச்சி……..உத்தமர் கோயில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா….

திருச்சி  அடுத்த பிச்சாண்டார் கோயில்லில் உள்ள  அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவையொட்டி 5 ம் நாள் பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகும். திருமங்கையாழ்வரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் திருக்கரம்பனூர் ஆதிமாபுரம் பிச்சாண்டார்கோவில் என பிரசித்தி பெற்றதும் மும்மூர்த்திகளும்,முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்.

உத்தமர் கோயிலில்  கடந்த 25 ந்தேதி கொடியேற்ற விழா நடைபெற்றது.   5 ம் நாளான நேற்று  பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய நிகழ்வான வைகாசி தேரோட்ட விழா வருகின்ற ஜூன் மாதம் 2- ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!