Skip to content
Home » திருச்சி அருகே ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் கும்பாபிஷேம்….

திருச்சி அருகே ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் கும்பாபிஷேம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சிநகரில் உள்ள ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு அப்பகுதி ஊர் பொதுமக்கள் காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்தனர் . முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை முடிவுற்று இன்று ஸ்ரீ தொரட்டி மரத்தான் பெரியசாமி க்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷே விழா நடைபெற்றது.

விழாவில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் கமலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் ஒன்றியகுழு உறுப்பினர் மாரியாயி பொன்னம்பலம் மற்றும் நிர்வாகிகள் அன்பழகன் பிரபு குறிஞ்சி நகர் நிர்வாகிகள் பழனிசாமி பாஸ்கரன் வினோத் சதீஷ் செல்வராஜ் ராஜேந்திரன் ,

செந்தில் குமார் ரேவதி நத்தம் ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகரன் ராஜா பன்னீர்செல்வம் மனோ முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் நத்தம் ஊராட்சிக்குட்பட்ட வேந்தன்பட்டி கூண்டராக்கன் பட்டி குறிஞ்சி நகர் மாகாளிப்பட்டி நத்தம் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!