Skip to content
Home » சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

  • by Senthil

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பினர்கள் செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), அர்ஜுனன் (திண்டிவனம்), கு.சின்னப்பா (அரியலூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை),
சட்டப்பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் இன்று
திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் சென்னை அணுகு சாலை இணைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த திருச்சி பேருந்து நிலைய பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பஸ் நிலையத்தின் மாதிரியை காட்டி பணிகளை அதிகாரிகள் விளக்கினர்.

இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!