Skip to content
Home » திருச்சி பைரவர் கோவிலில் விளக்கு கடை போடுவதில் தகராறு… ஒருவர் வெட்டிக்கொலை..

திருச்சி பைரவர் கோவிலில் விளக்கு கடை போடுவதில் தகராறு… ஒருவர் வெட்டிக்கொலை..

திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் முன்புறம் குரு அரிச்சந்திர பைரவர் கோயில் உள்ளது. அந்த கோவில் கேட்டிற்கு முன்பாக விளக்கு கடை போடுவதில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் வள்ளியம்மை மற்றும் செந்தமிழ் செல்வி ஆகியோர் விளக்கு கடை வைத்துள்ளனர். இதில் கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் நேற்று மதியம் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பாக கீழ தேவதானம் மஞ்சுளா என்பவரின் மகன் அருண் பிரசாத் (வயது 33) என்பவருக்கும் சத்யராஜ் (வயது 32)என்பவரின் உறவினர் மணிமாறன் (வயது 30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அருண் பிரசாத்தின் தந்தை ராஜேந்திரன் என்பவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்தில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அருண் பிரசாத் தனது தந்தை ராஜேந்திரனை தாக்கியதற்கு பழிக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் மணிமாறனின் உறவினர் சத்யராஜின் தந்தை தனபால்( வயது 60) என்பவரை நேற்று இரவு 8 மணி அளவில் கையில் அரிவாளுடன் வந்து தனபாலின் வீட்டில் புகுந்து அவரது மார்பினில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தனபால் உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!