Skip to content
Home » திருச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது…

திருச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம் , லால்குடியை அடுத்த வி. துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்  பாலசுப்பிரமணியன்( 46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள், 1 மகன் இருக்கின்றனர். இந்நிலையில் இவர், 16 வயது சிறுமியிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் அச்சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் இருப்பது  சிறுமிக்கு தெரியவந்தது. இது குறித்து லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் சிறுமி புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி மற்றும் எஸ்ஐ இசைவாணி ஆகியோர் போக்சோவின்  கீழ் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!