Skip to content
Home » திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

  • by Senthil

திருச்சி, தில்லைநகர் 7வது கிராஸ் மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(66). இவர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதன் காரணமாக பெரியசாமி திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்கரை காஜா பட்டியை சேர்ந்த கார்த்திக்கு என்கிற கட்டையன்(28), ஆரிஃப் கான்(19), நியமத்துல்லாஹ்(14) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் காஜாபேட்டை பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ்(32) என்பவர் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!