Skip to content
Home » நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

  • by Senthil

திருச்சி கிராப்பட்டி சிறப்பு காவல் படை எதிரே உள்ள ரயில்வே பாலம் அருகில் முள் புதரில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடந்தது திருச்சி, கிராப்பட்டி, முஸ்லிம் தெருவை சேர்ந்த, சவுரிநாயகம் மனைவி யாகுல மேரி (88) என தெரிய வந்தது. அவர் மற்றொரு மூதாட்டியுடன் வீட்டிலிருந்து வெளியே சென்று உள்ளார். இந்லையில் நேற்று மாலை அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவரது காதுகளில் இருந்த தோடுகள் அறுத்து எடுக்கப்பட்டிருந்தன. மேலும் அவரது தலையிலும் ரத்த காயங்கள் இருந்தன. எனவே அவர் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!