Skip to content
Home » திருச்சி என்ஐடி மாணவி மாயம்….. போலீசில் புகார்

திருச்சி என்ஐடி மாணவி மாயம்….. போலீசில் புகார்

  • by Senthil

திருச்சி துவாக்குடியில்,என் ஐ டி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம்
மத்திய அரசின் மனித வள துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும் வெளியில் அறைகள், வீடு வாடகைக்கு எடுத்தும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஓஜாஸ்வி குப்தா,  என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்றவர் இன்று வரை விடுதிக்கு திரும்பாத

நிலையில்அவரது செல்போனும்சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாகஎன்ஐடி பாதுகாவலர்கள் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி எங்கே சென்றார் ?என்ன ஆனார் ?அவருக்கு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? அல்லது யாரேனும் கடத்திச் சென்றார்களா ?அல்லது காதல் வலையில் சிக்கி சென்று விட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் என்ஐடி கல்லூரி விடுதி மாணவியரிடம் தற்காலிக பணியாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது விடுதி மாணவி ஒருவர் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!