Skip to content
Home » திருச்சி அருகே பூ கூடையில் மது பாட்டில் வைத்து விற்ற பெண் கைது….

திருச்சி அருகே பூ கூடையில் மது பாட்டில் வைத்து விற்ற பெண் கைது….

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் இயங்கி வருகிறது. இக்கடைகளில் பூஜைக்கு தேவையான தேங்காய் பழம் பூமாலைகள் சுவாமி படங்கள் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமயபுரம் சந்தை கேட் பகுதியை சேர்ந்த தேவி வயது(40) இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பூ விற்பனை செய்து கொண்டு வந்த தேவி அரசு மது

பாட்டிலை பூக்கூடையில் மறைத்து வைத்து விற்பனை செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் சந்தை கேட் பகுதியில் பூ வியாபாரம் செய்த போக பூ கூடையில் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை வைத்து விற்பனை செய்த தேவியை கையும் கழுவுமாக தனிப்படை போலீசார் பிடித்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் தேவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!