Skip to content

திருச்சி அருகே குழந்தை கடத்த வந்துள்ளதாக வாட்ஸப்பில் பொய் தகவல் பரப்பிய டிரைவர் கைது..

  • by Authour

சமீப காலங்களில் தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருவதும் அதனை சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல்கள் பரப்பி போலீசார் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி குழுமணி பேரூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மகாமுனி வயது (25) என்பவர் தனது சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் அதவத்தூர் கிராமத்தில் குழந்தை கடத்துபவர்கள் வந்துள்ளதாக கூறி தவறான தகவல்களை வாட்ஸ் அப் குருப்பில் பரப்பி உள்ளார். இந்த தகவலை அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் மகா முனியை கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!