Skip to content

திருச்சி அருகே கொலை செய்ய திட்டம்.. 2 ரவுடிகள் கைது…. பெண் ரவுடிக்கு வலைவீச்சு..

திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் திடீர் நகர் பகுதியில் வாகனத்தில் ரோந்து பணியில் சென்றனர்.அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த 4வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். அப்பொழுது அவர்களில் ஒரு பெண் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.மேலும் தப்ப ஓட முயன்ற இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் (24)மேல அம்பிகா புரத்தை சேர்ந்த இளவரசன் ( 26) பாலசுப்ரமணி (39)கயல்விழி சேகர் (53) என்பது தெரியவந்தது.
இவர்கள் நான்கு பேரும் ரவுடி பட்டியலில் உள்ளனர்.

மேலும் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.கடந்த ஆண்டு பிரபல ரவுடி கேபிள் சேகரின் மகன் முத்துக்குமாரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தனர்.இந்த வழக்கில் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் ஜாமனில் வெளியே வந்த அந்த நபர்களை கொலை செய்யும் நோக்கில் மேற்கண்ட 4 ரவுடிகளும் இணைந்து கொலை செய்ய திட்டம் போட்டு கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து சரவணன் இளவரசன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர் தப்பி ஓடிய பாலசுப்பிரமணி மற்றும் கயல்விழி சேகர் ஆகியோரை தேடி வருகின்றனர்.கயல்விழி சேகர் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட கேபிள் சேகரின் மனைவியாவார் கைது செய்யப்பட்ட இளவரசன் கேபிள் சேகரின் 2வது மகன் ஆவார். கைதான நபர்களிடமிருந்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

error: Content is protected !!