Skip to content

திருச்சியில் எல்இடி லைட்டுகளை துவக்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

திருச்சி, திருவானைக்கோவில் சாலையில் ரூபாய் 88.75 லட்சம் மதிப்பிலான அமைக்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் அமைச்சர் கே என் நேரு. திருச்சி திருவானைக்கோவில் ட்ரங் ரோடு மற்றும் கன்னிமார் தோப்பு ரோடு மையத்தோப்பில் 56 எண்கள் கொண்ட 150 வாட்ஸ் திறன்  கொண்ட ஹெரிடேஜ் வகையிலான எல்இடி மின்விளக்குகள் அமைக்கும் பணி ரூபாய் 88.75 லட்சம் மதிப்பீட்டில்

அமைக்கப்பட்டது. இதனை இன்று தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர்  வைத்திநாதன் , ஸ்ரீரங்கம்எம்எல்ஏ பழனியாண்டி, அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!