Skip to content
Home » திருச்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 541 மனுக்களை பெற்ற கலெக்டர்…

திருச்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 541 மனுக்களை பெற்ற கலெக்டர்…

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நான் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதிப் குமார் தலைமையில் இன்று 13.01.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச் வீட்டுமனைப் பட்டா ,பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை

வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 541 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம், துணை ஆட்சியர் நிலம் எடுப்பு முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஏழுமலை, உதவி ஆணையர் (கலால்) ரெங்கசாமி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!