Skip to content

திருச்சி அருகே சாலையில் இறந்து கிடந்த பெல் தொழிலாளி….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் வ உ சி நகரை சேர்ந்தவர் ராமானுஜம் (55). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு வலிப்பு நோயும், மூச்சு திணறல் இருந்து வந்ததாகவும் அதோடு இவருக்கு குடி பழக்கம் இருந்துவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் குடிபோதையில் படுத்து கிடந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் ஸ்டாண்டில் இருந்தவர்கள் பார்த்துவிட்டு திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் ராமானுஜத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!