Skip to content

கொத்தனாரை கல்லால் அடித்து கொன்ற நண்பர்கள்…. திருச்சியில் பரபரப்பு..

  • by Authour

திருச்சி, உறையூரைக் சேர்ந்தவர் குணசேகர் (55). இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயகுமார்,
தர்மா என்ற இரு மகனும் ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்த குணசேகர் கொத்தனார் வேலை செய்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் மதுபோதையில் சாலை ஒரத்தில் உறங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்றிரவு குணசேகர் ராமலிங்கநகர் அருகே சாலையோரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அங்கிருந்த கல்லை எடுத்து அவரது நண்பர்கள் குணசேகர் தலையில் அடித்ததில் குணசேகர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இந்த குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசேகரன் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!