Skip to content

கரூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் 104, 105 டிகிரி பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில்  நேற்று இரவு கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், மாயனூர், லாலாபேட்டை, குளித்தலை, திம்மாச்சிபுரம், புணவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, மகாதானபுரம், அய்யர்மலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மழைநீர் சாலைகளில் வெள்ளநீராக ஓடியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுபோல திருச்சி மாவட்டம் முசிறி வட்டாரத்திலும் நேற்று இரவு 9 மணி அளவில் சிறிது நேரம் கோடை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!