Skip to content
Home » திருச்சியில் காப்பகத்திலிருந்த 8 குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு….

திருச்சியில் காப்பகத்திலிருந்த 8 குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு….

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது இங்கு சுமார் 30 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் அந்த காப்பகத்தில் இருந்த கை குழந்தைகள் 8 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. காப்பக நிர்வாகிகள் உடனடியாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைகளை

அனுமதித்தனர். 8 குழந்தைகளுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கைக்குழந்தைகள் என்பதால் குழந்தைகள் வார்டில் அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!