Skip to content
Home » திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கல்லக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த
விழாவுக்கு லால்குடி எமஎல்ஏ அ. செளந்தரபாண்டியன் தலைமை வகித்தனர். மேலும் லால்குடி தொகுதியில் உள்ள 32 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் 698 மகளிா் சுய உதவிக் குழு மூலம் 6, 428 பெண்கள் வாங்கிய கடன்கள் ரூ. 11 கோடியே 46 லட்சத்து 49 ஆயிரத்து 997 -ஐ தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழை மகளிா் சுய உதவிக்குழு பெண்களிடம் வழங்கினாா். இந்நிகழ்வில் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் சாய் நந்தினி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க செயலா்கள் மற்றும் அலுவலா்கள் மகளிா் சுய உதவிக்குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!