Skip to content
Home » பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

பூப்பந்து போட்டி…. திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் முதலிடம்…

  • by Senthil

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக  இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி புதுகை, ஆலங்குடி ஜேசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (4/1/23) நடைபெற்றது.

திருச்சி, செயின்ட் ஜோசப்’ஸ், ஜமால் முகமது, மயிலாடுதுறை ஏ. வி. சி. புத்தானம்பட்டி, நேரு நினைவுஆகிய நான்கு கல்லூரி அணிகள் லீக் போட்டிகளில் பங்கேற்றன.

லீக் போட்டிகளில் திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி, ஜமால் முகமது கல்லூரியை 35-31, 35-33 என்ற புள்ளிகள் கணக்கிலும், மயிலாடுதுறை, ஏ.வி.சி கல்லூரியை 35-31, 35-30 என்ற புள்ளிகள் கணக்கிலும், புத்தானம்பட்டி நேரு நினைவு கல்லூரியை 35-13, 35-8 என்ற புள்ளிகள் கணக்கிலும் மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்து திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக பூப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியை 33-26, 35-33, புத்தானம்பட்டி, நேரு நினைவுகல்லூரியை 35-9, 35-2 என்ற புள்ளிகள் கணக்கிலும் இரண்டு போட்டிகளில் வென்று இரண்டாவது இடம் பிடித்தது.

மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரி, புத்தானம்பட்டி நேரு நினைவு கல்லூரியை 35-10, 35-11 என்ற புள்ளிகள் கணக்கில் ஒரு போட்டியில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி வீரர்களை கல்லூரி செயலாளர்  அருட்தந்தை கே. அமல், முதல்வர் அருட்தந்தை எம் ஆரோக்கியசாமி சேவியர், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை எம். பெர்க்மென்ஸ், உடற்கல்வி இயக்குனர் ஏ. பிரேம் எட்வின், உதவி உடற்கல்வி இயக்குனர் எஸ்.  ரெனில்டன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!