திருச்சி பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் ( 37). இவர் லேப் டாப் பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். .சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரிஸ்வான் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு
- by Authour
