Skip to content

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்  யாழ்ப்பாணம் (ஜாப்னா) நகருக்கும் திருச்சியில் இருந்து விமான சேவை தொடங்க உள்ளது.    வரும்  மார்ச் மாதம் முதல் புதிய விமான சேவையை இண்டிகோ  விமான நிறுவனம் தொடங்க உள்ளது.

மதியம் 12.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அந்த விமானம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம்  விமான நிலையத்தை சென்றடையும். மீண்டும்இந்த விமானம் மதியம் 2.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் என்று விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!