Skip to content
Home » திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தொடர்ந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளால் மத தலைவர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளுவர் பெரியார் ஆகியோரை தொடர்ந்து டாக்டர் அம்பேத்காருக்கு காவி, திருநீறு, குங்குமமிட்டு அவமதிக்கும் சனாதான சங்குபரிவார் கும்பலை கண்டித்து இன்று தமிழக முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் திருச்சி மாவட்ட  கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட விசிகவை சேர்ந்த தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தலைவர்களை அவமதிக்கும் விதமாக செயல்படும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை தொழிலாளர் முன்னணியின் மாநில துணைச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், மாவட்ட நிர்வாகிகள் கனியமுதன், சந்தன் மொழி, புல்லட் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!