Skip to content

போதை பொருள் கடத்தினால் குண்டாஸ்…..திருச்சி ஐஜி கார்த்திகேயன் எச்சரிக்கை

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்  அவர் திருச்சி மாநகர கமிஷனராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றினார்.. அதற்கு முன் திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையராகவும் மிக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். மேலும் கோவை சரக காவல்துறை துணைத்தலைவராகவும் 2018-ம் ஆண்டில் பணியாற்றியுள்ளார்.

ஐஜியாக பொறுப்பேற்ற கார்த்திகேயன் கூறும்போது, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் தமிழக முதல்வரின் ஆணைக்கேற்ப போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட 2023ம் ஆண்டில் அதிக முக்கியத்துவம் தரப்படும் ‘  கஞ்சா, குட்கா மற்றும் இதர போதைப் பொருட்களை கடத்துதல், பதுக்குதல் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மணல் கடத்தல் சட்டவிரோதமாக சாராய விற்பனை லாட்டரி விற்பனை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இணையதள மோசடிக் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சட்ட விரோத மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுதல் ஏற்படுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரெளடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு குண்டர் தடுப்புசட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர்.சாலை விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

ஐஜி கார்த்திகேயனை  நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் வேலை நாட்களில் தினமும் பகல் 12மணி முதல்1 மணி வரை காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம் என்றும் ஐஜி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!