Skip to content
Home » கோவிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

கோவிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காணகிளியநல்லூரில் அருள்மிகு சர்வலோகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் ஐயர் கண்ணன் கடந்த 10ம் தேதி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலின் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை கோவிலுக்கு   வந்த ஐயர் கோவிலின் பூட்டு உடைத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  விரைந்து உள்ளே சென்று பார்த்தபோது சாமி கழுத்திலிருந்த தாலி செயினை காணவில்லை. மர்மநபர்கள் புகுந்து கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கண்ணன் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!