Skip to content
Home » திருச்சியில் இளம்பெண் மாயம்….

திருச்சியில் இளம்பெண் மாயம்….

திருச்சி மணிகண்டம் ,கொழுக்கட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. இவருடைய மகள் கீதா (21).
10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை ராசு கீதாவின்  போனிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனையடுத்து தனது மகளை காணவில்லை என மணிகண்டம் போலீஸ் ஸ்டேசனில் கீதாவின் தந்தை ராசு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!