Skip to content

திருச்சி காந்தி மார்கெட்டில் இரும்பு கடை பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு….

திருச்சி காந்தி மார்க்கெட் மணிமண்டப சாலை பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (  63). இவர் வீட்டை பூட்டி விட்டு ராஜபாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் இரு தினங்கள் கழித்து ஊர் திரும்பினார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.4000 ரொக்க பணம் மற்றும் இரும்பு பொருட்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கஜேந்திரன் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சதீஷ்குமார் (20) மற்றும் ஒரு சிறுவனை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!