தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மத்திய தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி பதவி ஏற்கும் பொழுது விவசாய விலை பொருட்களுக்கு இரட்டடிப்பாக விலை தரப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை
வழங்கப்படவில்லை. எனவே, விவசாயம் விலை பொருட்களுக்கு இரட்டிப்பான வினா தர வேண்டும், மல்யுத்த வீராங்களிடம்பாலியல் சீண்டல் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நடவடிக்கை எடுத்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்தையொட்டி ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.