Skip to content

திருச்சி அருகே மீன் பிடி திருவிழா…போட்டி போட்டு மீனை பிடித்த மக்கள்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஸ்பா பொய்கைபட்டியில் அணைக்குளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நீர் நிரம்பியதை அடுத்து கடந்த ஆண்டு மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டும் மீண்டும் குளம் முழுதுமாக நிரம்பியது. தற்போது கோடை காலம் துவங்கிவிட்டதால் குளத்தில் நீரின் அளவு வெகுவாக குறைய ஆரம்பித்துள்ளது. தற்போது நீரின் அளவு குறைந்து விட்டதால்

கிராம மக்கள் சார்பில் மீன்களை பிடித்துக் கொள்ளும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

அதன்படி இன்று ஊர் முக்கியஸ்தர்கள் விழாவை தொடங்கி வைக்க மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மீன் பிடிக்கத் துவங்கினர். அதில் சிலர் கொசு வலைகளைப்பயன் படுத்தியும் மீன் பிடித்தனர். விரால், கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டுவகை மீன்கள் சிக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!