Skip to content

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு ….திருச்சி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

  • by Authour

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கிட வேண்டும் புதிய மின்சார சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தக்கூடாது விவசாய விளை பொருள்களை விற்க கிராமங்கள் தோறும் சந்தைகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து,  இந்தியா முழுவதும் விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதேபோல் 11 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ரயில் நிலையத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அப்போது போலீசார்   விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.போலீசார்ருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர் . சிலர் போலீசாரின் பிடியில் இருந்து  விடுபட்டு  ரயிலில் நிலையத்துக்குள் புகுந்து   தண்டவாளத்தில் இறங்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!