Skip to content
Home » திருச்சி வக்கீல் மாயம்…. மனைவி புகார்….

திருச்சி வக்கீல் மாயம்…. மனைவி புகார்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கல்லக்குடி, கல்லமேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(50). இவர் லால்குடி கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இந்நிலையில் ரமேஷ் கடந்த 17ம் தேதி தனது மாமனாரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வௌியே சேன்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.. இதனைதொடர்ந்து  ரமேஷ் மாமனார் வீட்டிற்கு செல்லவில்லை என தெரிய வந்தது. இந்நிலையில் சுகந்தி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கல்லக்குடி போலீஸ் ஸ்டேசனில் தனது கணவரை காணவில்லை புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!